ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு, இன்று களுத்துறையில் நடைபெற்றது.
“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ், களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
மே – 9 ஆம் திகதிக்கு பிறகு பொது கூட்டமொன்றில், மஹிந்த பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் தினேஷ் குணவர்தனவும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.










