பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் தமது நாடுகள் உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்கா, , ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
மேற்படி தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி, ஆஸ்திரேலிய பிரதமர் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவல், “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.