கேரளா கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர் புபுரஸ்ஸவில் கைது!

கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலதென்ன பகுதியில் நீண்டகாலமாக மிகவும் சூட்சுமமான முறையில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை கஞ்சாவினையும் பொலிஸார் கைப்பற்றினர்.

பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, புபுரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோ ரஞ்சித்தின் வழிகாட்டலுடனேயே சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் பிரிதொரு நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கினர். எனினும், அவர் தலைமறைவாகியுள்ளார். தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

புபுரஸ்ஸ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கலஹா நிருபர்- ரம்யா

Related Articles

Latest Articles