சஜித்தை கைவிடுகிறார் பிரபா கணேசன்?

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்திருந்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தனது ஆதரவை மீள பெறுவது தொடர்பில் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது.

இவ்வாறு ஆதரவை மீளப்பெற்ற பின்னர் அவர் சுயாதீனமாக செயற்படுவார் எனவும் அறியமுடிகின்றது.

“ ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரலும் புரியவில்லை.” – என்று பிரபா கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் உதயமான மனிதநேய மக்கள் கூட்டணியிலும் பிரபா கணேசன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles