சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான்.
முதல்முறையாக ஏலியனை தமிழ் சினிமாவில் காட்டவுள்ளதால், இப்படத்தை VFX தொழில் நுட்பத்துடன் உருவாகி வந்தனர்.
இதனிடையே தற்போது இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளதால் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன்படி கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் வழக்கு தொடர்ந்துள்ளதால் இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.