அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், ஜனவரியில் கட்சிதாவல்கள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின்போது தற்போது வெளிவிவகார அமைச்சராக இருக்கும் அலி சப்ரிக்கு நிதி அமைச்சு வழங்கப்படவுள்ளது என்று ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசமைப்பின் 21 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு எந்த அமைச்சையும் வைத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில்தான் இப்போது வகித்து வரும் நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்கவுள்ளார் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவிக்கின்றது.
ராஜித சேனாரத்ன, ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
