” நாட்டில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அதேபோல பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.” – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுநிலை) கமல் குணரத்ன தெரிவித்தார்.
மஹரகம பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அனைத்து பாதுகாப்பு தரப்புகளின் பங்கேற்புடன், வாரம் ஒருமுறை தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படும். அந்த கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் தேசிய பாதுகாப்பு சபைக்கூட்டம் நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேசிய பாதுகாப்பு என்பது பரந்தப்பட்ட விடயமாகும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல், கொரோனா போன்ற பெருந்தொற்றால் மக்கள் உயிரிழப்பது, இயங்கை அனர்த்தங்கள் போன்றவற்றின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனலாம். ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் கொலை இடம்பெறுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிடமுடியாது.
அத்துடன், பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொலிஸார்தான் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இந்நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். ” –










