பஸில் வரமாட்டார்: குட்டி தேர்தலையும் நாமலே வழிநடத்துவார்

உள்ளாட்சிசபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்கா பறந்த மொட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச, பொதுத்தேர்தலின்போதுகூட நாடு திரும்பவில்லை.
இதனால் பொதுத்தேர்தலை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார். ஓரிரு கூட்டங்களில் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் உள்ளாட்சிசபைத் தேர்தலை வழிநடத்த பஸில் வரவேண்டும் என கட்சி செயற்பட்டாளர்கள் சிலர் கோரி இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் எண்ணம் இல்லை என பஸில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளாட்சி தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பஸில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles