பிளெக்வுட் தோட்டத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தை, இ.தொ.காவின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
பிளெக்வுட் தோட்ட நிர்வாகம் மற்றும் உலக வங்கியின் 7.5 மில்லியன் ரூபா செலவின் குறித்த நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு அறை, வாசிப்பு அறை, ஓய்வறை, சாப்பாட்டு அறை, சமையல் அறை, சிறுவர் பராமரிப்பு உதவியாளர்களுக்கான அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, குழந்தை அறை, விளையாட்டு பொருட்களுக்கான அறை, நோய்வாய்ப்பட்டவர்களுக்கான அறை,குழந்தைகளுக்கான கழிவறை ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


