மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை (01) வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார்.
(31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோனின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விடுமுறை தினத்துக்கு பதிலாக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேனகா ஹேரத் மேலும் தெரிவித்தார்.
தலவாக்கலை பி.கேதீஸ்