மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகள் தினம் இன்று (10) மிகவும் உணர்வுப்பூர்வமாக மலையகத்தில் நினைவுகூரப்பட்டது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வானது பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் லேக் வளாகத்தில், பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வளர்கள், ஆன்மீக தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தியாகிகளை நினைகூர்ந்து பொதுநினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1940               ஜனவரி               10             ஆம் திகதியே மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார் முல்லோயா கோவிந்தன்.

அதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்திலும் மலையக தியாகிகள் தினம் இன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles