மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவிகனர்கள் குவிந்துள்ளனர்.
தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் என்பனவும் சிறைச்சாலைக்குள் சென்றுள்ளன.
காயமடைந்த நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
( பாதுகாப்பு தரப்பில் இருந்து இச்சம்பவம் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்க்பபடவில்லை.)
……………..
மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பல சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கான காரணம் அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.










