முட்டை விலையை கட்டுப்படுத்தினால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முட்டை கிடைக்காது

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு முட்டைகளை வெளியிட முடியாது என முட்டை உற்பத்தி தொடர்பான தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கால்நடை மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உதித வணிகசிங்க, எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் அடுத்த வருட காலப்பகுதியில் முட்டைகள் சந்தைக்கு முறையாக வெளியிடப்பட வேண்டும் என்பதற்காக கோழிகளை வழங்க வேண்டும். முறையாக வளர்க்க வேண்டும்.

அதற்கு, முட்டை பண்ணைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான விலை உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே முட்டை விலை ரூ.49 ஆக உள்ளதால், விற்பனைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Latest Articles