மெக்சிகோவில் பயங்கர விபத்து -49 பேர் பலி! (photos)

தெற்கு மெக்சிகோவில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர். அப்போது, சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை பாலத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே 49 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 58 பேரில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 40 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சரக்கு லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டினர்

இந்த விபத்து குறித்து சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ கூறியதாவது:-

விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரியில் இருந்தவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். அதனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யவில்லை.

விபத்துக்குள்ளான சரக்கு வாகனத்தில் சுமார் 107 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகளவில் மனிதர்களை ஏற்றிச் சென்றதால் எடை தாங்காமல் வாகனம் கவிழ்ந்திருக்கலாம்.

மேலும், வாகனம் விபத்துக்குள்ளானபோது இன்னும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இருந்ததாக, குடிவரவு முகவர்களால் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற பயத்தில் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles