விசேட உபகுழுக்களை அமைக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் புதிய அரசியல் குழு உறுப்பினர்களாக, எஸ். சசிகுமார் (கம்பஹா மாவட்டம்), எம். பரணீதரன் (கேகாலை மாவட்டம்), எஸ். சரஸ்வதி (மகளிர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணியின் பதினான்கு அரசியல் குழு உறுப்பினர்களில், ஐந்து எம்பிக்கள் மற்றும் பொதுசெயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோரை தவிர, ஏற்கனவே சோமா சிறிதரன், அன்டனி லோரன்ஸ், எஸ். விஜேசந்திரன், கே.ரி. குருசாமி, எம். சந்திரகுமார் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

அரசியல் குழுவிலும், மத்திய குழுவிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இன்னமும் மாற்றங்கள், உள்ளீர்ப்புகள் செய்யும் பிரேரணைகளை அடுத்த அரசியல் குழுவில் முன்வைக்க உள்ளதாக தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதைத்தவிர அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விவகாரங்கள் தொடர்பில் விசேட உபகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles