தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவியதாக மே-18 முதல் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.
திருடர்களை பாதுகாக்கும் டீல் வேண்டாம்…
தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டிய மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்…
அரசாங்கத்தின் பலிவாங்கும் செயலை உடனே நிறுத்த வேண்டும்…
என்ற கோரிக்கைகளை வலியுத்தி நாளை மே-18 முதல் நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.