இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகும் ரிஷப் பாண்ட்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக விக்கெட் காப்பாளரான ரிஷப் பாண்டை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், தாம் டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து புதிய தலைவர் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த சுனில் கவாஸ்கர், அந்த பதவிக்கு ரிஷப் பாண்ட் பொருத்தமானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்குத் தலைமை பொறுப்பு வழங்கப்படும் பட்சத்தில் 3 வகையான போட்டிகளிலும் மேலும் திறமையை வெளிப்படுத்த அவருக்கு உதவியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles