இந்திய நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்றுவருகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை ஏழு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

வாக்கெண்ணும் பணிகள் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக தமிழகத்தில் 44,800 வாக்களிப்பு நிலையங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

Related Articles

Latest Articles