எம்பிலிபிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் “சந்திரிக்கா” வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு வாவிக்குள் குதித்த குறித்த தாய் (32 வயது) மற்றும் மகன் (11 வயது) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், 5 வயது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.