இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் தற்கொலைக்கு முயற்சி- 5 வயது குழந்தை மரணம்

எம்பிலிபிட்டிய பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாயொருவர் “சந்திரிக்கா” வாவிக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறு வாவிக்குள் குதித்த குறித்த தாய் (32 வயது) மற்றும் மகன் (11 வயது) ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், 5 வயது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles