நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம்கூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நாடாளுமன்றத்தை சூழ பாதுகாப்பு ஏற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.