உப செயலகம் திறப்பு இயலாமையின் வெளிப்பாடு – இ.தொ.காவை சாடுகிறார் வேலுகுமார் எம்.பி.

“நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே.” என ஜனாநாயக மக்கள் முன்னனணியின் பிரதி தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் பின்வருமாறு தெரிவித்தார்..

மலையக மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக அதிகார பகிர்வு தொடர்பாக அதிகம் பேச வேண்டிய, அதிகம் அக்கறை காட்டவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். இவ்வாறான சூழ்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களை திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே ஆகும். கடந்த நல்லாட்சியில், தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் தேங்கிக்கிடந்த அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது. அதன் போது, அரசியல் அதிகார பகிர்வு, அரச நிர்வாக அதிகார பகிர்வு இரண்டையும் சமநிலையாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இலங்கையின் மிகப்பெரிய இரண்டு பிரதேச சபைகளாக இருந்த நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளை, நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகளை, அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வுட் என 6 பிரதேச சபைகளாக தரம் உயர்த்தினோம். அதன் மூலம் மலையக மக்களின் நீண்டகால அபிலாஷையாக இருந்த, அரசியல் அதிகார பகிர்வை நாம் பெற்றுக்கொடுத்தோம். அதனை தொடர்ந்து, அரச நிர்வாக அதிகார பகிர்வாக பிரதேச செயலகங்களை அதிகரிப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டது. அதற்கான அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் இருந்த 5 பிரதேச செயலக பிரிவிகளை 10 பிரதேச செயலக பிரிவுகளாக அதிகரிப்பதற்கு வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

2019 ஆட்சி மாற்றத்தின் பின், கடந்த இரு வருட காலத்தில், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கத்தின் இரண்டு பாதீடுகள் முன்வைக்கப்பட்டுவிட்டது. எனினும் அரச தரப்பில் உள்ளவர்கள், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு அவசியமான நிதியையும் ஏனைய வளங்களையும் பெற்றுக்கொள்வதற்குரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று, புதிய பிரதேச செயலகம் தொடர்பாக சமூகத்தில் கேள்விகள் எழ தொடங்கிவிட்டது. இதனை மூடி மறைப்பதற்காக, இன்று தாலவாக்கலையில் உப பிரதேச செயலக காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பிரதேச செயலகமொன்று உருவாக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் தசாப்தகால பிரச்சினையாக இப்பிரச்சினை உள்ளது. இதனை தீர்ப்பதற்கு பதிலாக இன்னும் பல தசாப்தங்களுக்கு இழுபறி நிலைக்கு தள்ளும் செயற்பாடே இவ் உப பிரதேச செயலக காரியாலயம் ஆகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த அரசாங்கத்தில் புதிய பிரதேச செயலக பிரிவுகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அதன் படி அரச வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை, தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள், அழுத்தம் கொடுத்து, நடைமுறை படுத்துவது மட்டுமே உள்ளது. அதை கூட செய்ய அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகளுக்கு இயலுமை இல்லையா? அல்லது, அவர்களின் வழமையான அசமந்த போக்கா இந்நிலைக்கு காரணம்? அல்லது வழமைபோல மக்கள் பிரச்சினையை இழுத்தடிப்பு செய்து அரசியல் லாபம் ஈட்டும் இன்னுமாறு நடவடிக்கையா? என்பதையே நாம் மக்கள் முன் கேள்வியாக முன்வைக்கின்றோம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles