உள்ளாட்சி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles