‘எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு’

கொழும்பு நகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆமர்வீதி உட்பட சில எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, எரிபொருள் நிலையம் அமைந்துள்ள வளாகத்தை சூழ வாகனங்களும், மக்களும் நீண்டவரிசையில் நிற்கும் நிலையில், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.

இந்நிலையிலேயே தற்போது இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles