ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு , பொரளை கெம்பல் பூங்காவில் இன்று மதியம் ஆரம்பமான நிலையில் பெருமளவான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில் உள்ள உறுப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் தாவுவார் எனக் கூறப்பட்ட ராஜித சேனாரத்னவும் மாநாட்டில் பங்கேற்று, முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
