ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டியில் தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார்.இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது.
ஜடேஜா 57 ஓட்டங்களுடனும் தோனி 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியில் 28 ஓட்டங்கள் எடுத்த தோனி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற புதிய சாதனை படைத்தார். அவர் 5,023 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் 4,369 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.