கண்ணீர் குளமானது பசறை – 7 பேரின் சடலங்கள் நல்லடக்கம்! 9 பேருக்கு நாளை இறுதிக்கிரியை!!

பசறை பஸ் விபத்தில் பலியான 15 பேரில் ஏழு பேரின் சடலங்கள் 21-03-2021 பிற்பகல் 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய 09பேரின் சடலங்களும் நாளை நல்லடக்கம்செய்யப்பவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பி.சி ஆர். பரிசோனைகளை மேற்கொண்டால், அறிக்கைகள் கிடைக்க தாமதமாவதினால் 15பேரின் சடலங்களும் “ரிபட் என்டிஜன்” பரிசோனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இப்பரிசோதனைகள் 20-03-2021ல் இரவில் மேற்கொண்டு, அதிகாலை 2.00 மணியளவில் அனைத்து சடலங்களும் உறவினர்களிடம், பதுளை மருத்துவனை பிரேத அறையிலிருந்து ஒப்படைக்கப்பட்டன.

இதற்கமைய லுணுகலையைச்சேர்ந்த அந்தனி நோவா மற்றும் அவரது மனைவி பெனடிக் மொரோனா , ஹாலி – எலை, அந்துடுவா வெலையைச் சேர்ந்த டேனியல் ஹரிகரன் , அடாவத்தையைச் சேர்ந்த பெருமான் முரளிதரன் , லுணுகலையைச் சேர்ந்த ஆர். எம். சந்தமாலி ஆகியோரது சடலங்கள் ,மே ற்குறிப்பிட்ட இடங்களின் மயானங்களிலும் , லுணுகயைச்சேர்ந்த ஜயதுன் பிபி , ஹலிமா உம்மா ஆகியோரது ஜனாசாக்கள் லுணுகலை மையவாடியிலும் நல்லடக்கம்செய்யப்பட்டுள்ளன.

ஏனைய சடலங்கள் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. இவ் எழுவரது இறுதிச்சடங்கில்பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் .

எம். செல்வராஜா

Related Articles

Latest Articles