கம்பளை இந்துக் கல்லூரி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உயர்தரம் பயின்றுவரும் மாணவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடம் நடத்தப்பட்ட துரித எடிஜன் பரிசோதனை போது ஒரு மாணவி கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த பாடசாலையின் நான்கு ஆசிரியர்களும், குறித்த மாணவியின் சக மாணவிகளையும் சுய தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் தொற்று நீக்கும் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.