காணி தகராறு – 74 வயது முதியவர் மண்வெட்டித் தாக்குதலில் பலி

காணி தகராறு காரணமாக 60 வயதுடைய நபரொருவர் தனது மூத்த சகோதரியின் கணவரை (வயது 74) மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர்.

146 ஹெலபதுகம கல்நேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே மேற்படி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஹெலபதுகம பகுதியைச் சேர்ந்த 60 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர் கடந்த 16 ம் திகதி ஹெலபதுகம பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த போது குறித்த இடத்திற்கு சென்று அவரது மூத்த சகோதரியின் கணவருக்கும் அவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போது சந்தேக நபரான சகோதரர் சகோதரியையும் அவரது கணவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பலத்த காயத்திற்குள்ளான இருவரையும் கல்நேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சகோதரியின் கணவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles