குளத்தில் மூழ்கி இரு சிறார்கள் பலி!

குருணாகல், வில்பாவ குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

13 மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

நான்கு சிறுமிகள் நேற்று மாலை நீராடச்சென்றுள்ளனர். இவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர். பிரதேச வாசிகள் அவர்களை மீட்டுள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles