” கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தை விமர்சித்தவர்கள்கூட இன்று அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்கள் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தோட்டப்பகுதிகளிலுள்ள மரங்களை நிர்வாகங்கள் வெட்டி விற்கின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.