ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் இராணுவ விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 படையினர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பதற்றமான பகுதியை கண்காணிக்க இராணுவ தளபதி உட்பட பலர் விமானத்தில் சென்றனர்.
ஆனால் அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது.இதில் மூத்த இராணுவ தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உட்பட 10 இராணுவத்தினர் பலியாகினர்.
இச்சம்பவத்தையடுத்து 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.