ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 57 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
எனினும், போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
