சிங்கப்பூர் பிரதமர் இராஜினாமா!

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங், எதிர்வரும் 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

நாட்டின் 3 ஆவது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

Related Articles

Latest Articles