மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். 174 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அடை மழை ,வெள்ளம் மற்றும் மண்சரிவால் 6 மாவட்டங்களில் 5, 357 குடும்பங்களைச் சேர்ந்த 22, 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
192 குடும்பங்களைச் சேர்ந்த 690பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
