🛑டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!
🛑 ரூ. 50 லட்சம்மும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும்!!
டித்வா பேரிடர்: பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் (லயன் வீடுகளின் எண்ணிக்கை)
பதுளை மாவட்டம்
முழுமையாக – 87
பகுதியளவு – 617
………
நுவரெலியா மாவட்டம்
முழுமையாக – 119
பகுதியளவு – 681
……..
கண்டி மாவட்டம்
முழுமையாக – 127
பகுதியளவு – 442
……..
மாத்தளை மாவட்டம்
முழுமையாக – 80
பகுதியளவு – 204
…….
இரத்தினபுரி மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – 125
……
கேகாலை மாவட்டம்
முழுமையாக – 10
பகுதியளவு – 36
…….
மொனறாகலை மாவட்டம்
முழுமையாக – 05
பகுதியளவு – 23
…..
களுத்துறை மாவட்டம்
பாதிப்பு இல்லை.
……
குருணாகல் மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – இல்லை.
…….
மாத்தறை மாவட்டம்
முழுமையாக – இல்லை.
பகுதியளவு – 19
……..
காலி மாவட்டம்
முழுமையாக – இல்லை.
பகுதியளவு – 05
…..
கொழும்பு மாவட்டம்
முழுமையாக – 01
பகுதியளவு – இல்லை.
முழுமையாக சேதமடைந்த லயன் வீடுகளின் மொத்த எண்ணிக்கை – 431
பகுதியளவு சேதமடைந்த லயன் வீடுகளின் மொத்த எண்ணிக்கை – 2,152
முழுமையாக சேதமடைந்த லயன் வீடுகளுக்கும் 50 லட்சம் ரூபா இழப்பீடும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும். இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டு மதிப்பீட்டுக்கமைய கொடுப்பனவு வழங்கப்படும்.
பகுதியளவு சேதமடைந்த லயன் அறைகளில் வாழமுடியாத சூழல் இருந்தால் அதற்கும் 50 லட்சம் ரூபா வழங்கப்படும்.
தகவல்மூலம் – பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு










