திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வீடுமீது தாக்குதல் – பதுளையில் ஐவர் கைது!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது வாசஸ்தலம் தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார் ஐந்து பேரை, இன்று கைது செய்துள்ளனர். மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் ‘மொட்டு’ சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற, பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வாசஸ்தலமே, தாக்கி சேதப்படுத்தப்பட்டதாகும்.

கடந்த 9ந் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பண்டாரவளை மாநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர், அங்கு கூடிய கும்பல், மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்திற்கு ஊர்வலமாக சென்று, அவ் வாசஸ்தலத்தை தாக்கி, பலத்த சேதத்தினை ஏற்படுத்தியிருந்தனர்.

இச் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார், இன்று ஆரம்பக்கட்டமாக ஐவரைக் கைது செய்து, விசாரணைக்குற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர், அவர்கள், பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles