இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணியும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்து.
இதற்கமைய, இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும், போட்டியாக அமையப்போகிறது.