மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் தேசிய அரசு அமைக்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்தார்.
தேசிய அரசமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி விடுக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய அரசமைப்பது தொடர்பில் இந்த அரசுடன் நான் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. எமது கட்சியும் நடத்தவில்லை. அதேபோல பிரதமர் பதவி ,அமைச்சு பதவிகள் பற்றியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசுடன் கலந்துரையாடவில்லை.
எனினும், மக்களை திசைதிருப்புவதற்காக போலித்தகவல்களை இந்த அரசு சமுகமயப்படுத்திவருகின்றது.
மக்கள் ஆணை கிடைக்காத இந்த ஜனாதிபதியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கமாட்டோம். எந்தவொரு பதவிகளையும் ஏற்கவும்மாட்டோம்.” – என்றார் சஜித்.
