‘நினைவேந்தல் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் 28 இல் பூரண ஹர்த்தால்’

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று (ஹர்த்தால்) தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.

அத்துடன், நாளை மறுதினம் 26 ஆம் திகதி யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உணவுதவிர்ப்பு போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் உட்பட தியாகிகளுக்கான நிவேந்தல் உரிமையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று மாலை யாழில் கூடின. இது விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இன்று நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. நினைவேந்தலுக்கான தடை உத்தரவுநீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அறவழிப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக்கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

Related Articles

Latest Articles