பசறை பிரதேச பிரபல பாசாலையொன்றில் மேலும் இரண்டு மாணவர்களுக்கு இன்று( 22/01) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி இனங்காணப்பட்ட தொற்றுக்குள்ளான இரண்டு மாணவர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிய 06 மாணவர்கள் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டதோடு, இன்று மேலும் இரண்டு மாணவர்களுக்கு இன்று தொற்றுறுதி செய்யப்பட்டது என பசறை பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளானோரோடு நெருங்கிய தொடர்பை பேணிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த தொற்றாளர்கள் இன்று தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்ப










