பசறை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் (பசறை மத்திய மகா வித்தியாலயம் )
ஆறு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இன்று( 21/01)
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 4 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவிகளும் அடங்குகின்றனர்.
குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களோடு தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி இன்று தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக பசறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இவர்களில் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரும்
, லுணுகலை பிரதேசத்தைச் சேரந்த மூன்று பேரும் அடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
நடராஜா மலர்வேந்தன்










