பசறையில் கடந்த 20ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதி குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதாக, பசறைப் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சாரதி, பஸ் அட்டவணையை பின்பற்றாத நிலையில் செயல்பட்டமை, பொறுப்பற்ற நிலையில் பஸ்சை கடும் வேகத்தில் செழுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியிருந்தார்.
அக் குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், மேலுமொரு மோசடி குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.
குறித்த பஸ் சாரதி, பிறிதொரு சாரதியின் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியே, விபத்துக்குள்ளான பேருந்தை செழுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது. அத்துடன், இச் சாரதி தனக்குறித்தற்ற அனுமதிப்பத்திரத்தை பயன்னடுத்தி, நீண்ட காலமாகவே சாரதியாக இருந்து செயல்பட்டு வந்தமை குறித்த தகவல்களும், வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அத்துடன் குறித்த சாரதிக்க எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை, முன்னெடுக்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேற்படி பசறை விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை










