பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் – வகுப்பு நேரங்களில் மாற்றம்!

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாலை 3.30 வரை கல்வி நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லையென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles