புதிய வருமான வரி முறைக்கு எதிராக ஹட்டனில் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக, ஹட்டனிலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று  தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கறுப்புக் கொடிகளால் தபால் நிலைய வளாகத்தை அலங்கரித்தும் தபால் நிலையங்களை மூடியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Latest Articles