மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக உதவி ஆசிரியர்களினால் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும், மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி கனகராஜிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனையடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ஆகியோர் கடந்த மாத முற்பகுதியில் இது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்கள் எதிர்வரும் 23ம் திகதி (23-10-2020) வழங்கிவைக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இன்று காலை அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தொலைபேசியில் மூலம் அறிவித்துள்ளார். இதற்காண சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் பூர்த்திசெய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

– ஊடகப் பிரிவு

Related Articles

Latest Articles