ஹிஷாலினியின் மரண பரிசோதனை தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுகின்றது. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஹிஷாலியினின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதனை வலியுறுத்தியும், சுயாதீன விசாரணைக்கான சூழுல் உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரியும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்தனர்.
” மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் எனது மகளை இருட்டறைக்குள் வைத்து கொடூமைப்படுத்தியுள்ளனர். மரண பரிசோதனை நடத்திய வைத்தியர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரினோம்.” – என்றும் ஹிஷாலினியின் பெற்றோர் குறிப்பிட்டனர்.