தனமல்வில, சூரியாரா பகுதியில் ஆட்டோவொன்று இன்று முற்பகல் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த ஆட்டோவில் 9 பேர் பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
உடவளவயிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த குறித்த ஆட்டோ, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
