மறந்துவிட்டு பயணிக்காதீர்கள்!

சிரேஸ்ட ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணாவின் முகநூலில் இருந்து…

83 இனக்கலவரம் நாட்டின் பல பகுதிகளில் நடந்து தமிழரின் இருப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டது, இந்த கலவரம் நடக்கும்போது நுவரெலியா மாவட்டம் மட்டும் அமைதி பூங்காவாக இருந்தது கலவரம் நடந்து இரண்டாம் நாள் அப்போது பிரபல அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க நுவரெலியா வருகிறார் .

அவர் வந்தவுடன் தனது சகாக்களிடம் கேட்டது நுவரெலியாவை மட்டும் ஏன் விட்டுவைத்து இருக்கின்றீர்கள்” அன்று இரவே நுவரெலியாவில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்படுகின்றன, கந்தப்பொலையில் தமிழருக்கு சொந்தமான பிரபலமான கந்தப்போல ஏஜென்சியின்” வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன அந்த நிறுவனமும் சூறையாடப்படுகின்றது,

இது ஜெஆரின் மேல் தனக்கு இருந்த விசுவாசத்துக்கு காமினி திஸாநாயக்கவால் செய்யப்பட்ட பிரதியுபகாரம்” இந்த இனவாதியின் மகனான நவீன் திஸாநாயக்கவிடம் மலையக தோட்டப்புற வீடமைப்பு காணி உறுதிகளை வழங்குமாறு கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்?

பிரதமருக்கு குடைப்பிடிக்கும் நீங்கள் அவரிடம் இந்த கோரிக்கையை முன் வைப்பதுதானே நியாயம்? காமினியின் தாத்தாவுக்கு இந்த பெருந்தோட்டங்கள் சொந்தம்? தலையை விட்டுவிட்டு வாலுடன் எதற்கப்பா விவாதம்?

குறிப்பு.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பல ஆயிரக்கணக்கான மலையக தமிழரின் வாழ்விடம் இல்லாமற் போனது அவர்களுக்கு எந்தவித நிவாரணங்களையும் வழங்காத காமினி, கொத்மலை பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு நட்ட ஈட்டு தொகையுடன் புதிய வீடுகள் காணி உரிமைப்பத்திரங்களுடன் வழங்கினார் அவற்றில் ஒரு கிராமம்தான் புஸ்ஸல்லாவையின் மிகப்பெரிய தேயிலைத்தோட்டமான ரோத்சைல்ட் தோட்டத்தை சுவீகரித்து அதை நவகோடாதர ” என்று மிகப்பெரிய சிங்கள கிராமமாக உருவாக்கினார்.

Related Articles

Latest Articles