‘மஹிந்த நாடாளுமன்றமும் வரவில்லை’

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.எனினும், சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

மே – 09 சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதன்பின்னர் திருமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மொட்டு கட்சி கூட்டத்திலும் மஹிந்த, நாமல் ஆகியோர் பங்கேற்கவில்லை. இன்றைய சபை அமர்விலும் கலந்துகொள்ளவில்லை.

Related Articles

Latest Articles