இலங்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இத்துடன், கொவிட் தொற்றின் மரணங்கள் 157ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 14ஐச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு நியுமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருந்ததுடன் கொவிட் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளார்.
2. கொழும்பு 15ஐச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வீட்டில் இவர் உயிரிழந்துள்ளார். நியூமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் திகதியே இவரது மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
3. கொழும்பு 15ஐச் சேர்ந்த 84 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் டிசம்பர் 12ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு நியுமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இவரது மரணம் டிசம்பர் 15ஆம் திகதி பதிவாகியுள்ளது.